திருப்பூரில் வாய்க்கால்கள் தூர் வரும் பணி

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதிகளில் உள்ள கிளை வாய்க்கால்களில் குடிமராமத்து பணிகளின் கீழ் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.பருவ காலம் தொடங்கியதால் விவசாயிகள் பணிகளை தொடங்கியுள்ளனர்.

இதனால் கால்வாய்களை சீரமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்தனர்.இதனையடுத்து குடிமராமத்து பணிகளை பார்வையிட்ட ஆட்சியர் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளிடம் எடுத்துரைத்தார். ஆய்வின் போது பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் விவசாய பிரதிநிதிகள் உடன் இருந்தனர். 

Exit mobile version