ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசன டிக்கெட் வழங்கும் பணி தொடங்கியது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனத்திற்கான டிக்கெட் வழங்கும் பணி தொடங்கியது. கொரோனா பரவல் காரணமாக திருப்பதி பக்தர்களுக்கு மட்டுமே இலவச தரிசனத்திற்கான டிக்கெட் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், நள்ளிரவு முதல் அனைத்து மாநில பக்தர்களுக்கும் இலவச தரிசன டிக்கெட் வழங்கும் பணி தொடங்கியது. டிக்கெட் பெரும் பக்தர்கள் நாளை முதல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version