பெண்கள் விடுதலையே நாட்டின் வளர்ச்சிக்கு உதாரணம்- நல்லக்கண்ணு

பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களைத் தடுக்க அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு வலியுறுத்தியுள்ளார்.

பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமைகளைக் கண்டித்து, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு, மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி, நீட் எதிர்ப்பு ஆசிரியை சபரிமாலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய நல்லக்கண்ணு, பெண்களுக்கான விடுதலையே நாட்டின் உண்மையான விடுதலை என்றும், பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் கொடுமைகளைத் தடுக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Exit mobile version