கேரளாவில் மகளிர் மனித சுவர் போராட்டம் : அச்சுறுத்தலை தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்பு

கேரளாவில் இன்று மாலை நடைபெறும் மகளிர் மனித சுவர் போராட்டத்திற்கு இந்து அமைப்புகள் மிரட்டல் விடுத்து இருப்பதை தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் இளம்பெண்களை அனுமதிக்க வலியுறுத்தியும், வழிபாட்டில் சீர்த்திருத்தங்களை மக்கள் ஏற்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தும் கேரளாவில் இன்று மாலை மகளிர் மனித சுவர் போராட்டம் நடத்தப்படுகிறது.

காசர்கோட்டில் இருந்து தென் எல்லையான பாறசாலை வரை இந்தப் போராட்டம் நடக்கிறது. இதற்கு பல்வேறு சமூக அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்தப் போராட்டத்தில் சுமார் 30 லட்சம் பெண்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போராட்டத்திற்கு இந்து அமைப்புகளின் எதிர்ப்பு தெரிவித்து இருப்பதால், போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version