பெண் சமூக முன்னேற்றம்,கல்வி விழிப்புணர்வு மராத்தான் போட்டி

நாமக்கல்லில் பெண் சமூக முன்னேற்றம் மற்றும் பெண் கல்வி விழிப்புணர்வு மராத்தான் போட்டி நடைபெற்றது.

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரியின் 50-வது ஆண்டு பொன்விழாவையொட்டி பெண் சமூக முன்னேற்றம் மற்றும் பெண் கல்வி அவசியம் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. கல்லூரி நுழைவு வாயிலில் தொடங்கிய போட்டியை சார் ஆட்சியர் கிராந்திகுமார் பதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Exit mobile version