கள்ளக்காதலுக்காக அக்காவை கொலை செய்த தங்கை ; தலைமறைவான அக்கா கணவர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கர்ப்பிணி அக்காவை கழுத்தை நெரித்து கொலை செய்த தங்கையை காவல்துறையினர் கைது செய்தனர்.

தலைமறைவான அக்கா கணவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

ஓசூர் அருகே உள்ள பேளகொண்டப்பள்ளி தைலதோட்ட பகுதியில், கடந்த 26ம் தேதி கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.

விசாரணை மேற்கொண்டதில், சடலமாக மீட்கப்பட்டவர் அசாம் மாநிலத்தை சேர்ந்த ஏலா என்பதும், இவர் தனது கணவர் ராகுல் மற்றும் சகோதரி தமன்னா உடன் பேளகொண்டப்பள்ளியில் வசித்து வந்ததும் தெரியவந்தது.

சந்தேகத்தின் அடிப்படையில், தங்கை தமன்னாவிடம் விசாரணை நடத்தியதில், அண்மையில் அக்கா கணவர் ராகுலுடன் தனிமையில் உல்லாசமாக இருந்ததும், தட்டிக்கேட்ட ஆத்திரத்தில் இருவரும் சேர்ந்து ஏலாவை கழுத்தை நெரித்து கொலை செய்ததையும் ஒப்புக்கொண்டார்.

இதனையடுத்து தமன்னாவை கைது செய்த காவல்துறையினர், தலைமறைவான கணவர் ராகுலை தேடி வருகின்றனர்.

Exit mobile version