குவைத்தில் சிறை வைக்கப்பட்டுள்ள தாயை மீட்டுத் தர வேண்டும் : ராமநாதபுரத்தைச் சேர்ந்த சிறுமிகள் கோரிக்கை

குவைத்தில் சிக்கியுள்ள தங்கள் தாயை மீட்டுத் தரக் கோரி ராமநாதபுரத்தைச் சேர்ந்த சிறுமிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். ராமநாதபுரம், கடம்பன் குளத்தைச் சேர்ந்த லிங்கமுத்து குடும்ப வறுமை காரணமாக அரபு நாடான குவைத்திற்கு வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த 15 நாள்களுக்கு முன் தனது மகள்களிடம் தொலைபேசியில் பேசிய அவர், தான் சிறை வைக்கப்பட்டுள்ளதாகவும், கொத்தடிமை போல் நடத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அதிர்ச்சியடைந்த லிங்கமுத்துவின் மகள்கள் தங்கள் தாயை உடனே மீட்டுத் தரக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Exit mobile version