சேலம் அருகே கணவனை இழந்த பெண்ணை, தீயிட்டு கொன்ற கள்ளக்காதலன்!

சேலம் மாவட்டம் நங்கவள்ளியைச் சேர்ந்த கறிக்கடை தொழிலாளி செந்தில் குமார், மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 7 வருடமாக தனியாக வசித்து வருகிறார். 2017 ஆம் ஆண்டில் போக்ஸோ சட்டத்தில் கைதான இவர் மீது, நங்கவள்ளி காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில், அய்யம்புதூரை சேர்ந்த கணவனை இழந்த பார்வதி என்பவருடன் செந்தில் குமாருக்கு பழக்கம் ஏற்பட்டு சேர்ந்து வாழ்ந்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை வெளியூர் சென்று திரும்பிய செந்தில் குமார், வீட்டில் வேறு ஒரு ஆணுடன் பார்வதி பேசியதை பார்த்து, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து, பார்வதி மீது மண்ணெண்ணை ஊற்றி கொளுத்திவிட்டு செந்தில் குமார் தப்பிவிட்டார். அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்து பார்வதியை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலன் இன்றி பார்வதி உயிரிழந்தார்.இந்த கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, மேட்டூரில் பதுங்கி இருந்த செந்தில் குமாரை கைது செய்தனர்.

Exit mobile version