கழுத்தில் காயங்களுடன் வீட்டில் இறந்து கிடந்த பெண்: காவல்துறை விசாரணை

மதுரை அருகே பெண் ஒருவர், கழுத்தில் காயங்களுடன் வீட்டில் இறந்து கிடந்த சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் திருநகரில் அருகே சூறாவளி மேடு பகுதியைச் சேர்ந்த அசோக், சுதா தம்பதியினரிடையே குடும்பத் தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று காலை கழுத்தில் காயங்களுடன் சுதா இறந்து கிடப்பதைக் கண்டு அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், சுதாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில், சுதா கழுத்தை நெறித்து கொல்லப்பட்டிருக்கலாம் என முதல் கட்ட விசாரனையில் தெரியவந்துள்ளது. வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், தலைமறைவாகியுள்ள சுதாவின் கணவர் அசோக்கை தேடி வருகின்றனர்.

Exit mobile version