News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

ஜோசப் நீ எனக்கு உண்மையா இல்ல… கள்ள காதலனிடம் உண்மைக் காதலை எதிர்பார்த்த கள்ளக்காதலி

Web Team by Web Team
July 21, 2021
in TopNews, க்ரைம், செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
ஜோசப் நீ எனக்கு உண்மையா இல்ல… கள்ள காதலனிடம் உண்மைக் காதலை எதிர்பார்த்த கள்ளக்காதலி
Share on FacebookShare on Twitter

காஞ்சிபுரம் அருகே, கள்ளக்காதலன் இன்னொரு பெண்ணுடன் கள்ளக்காதலில் இருப்பதை அறிந்த காதலி ஒருவர், தனது மூன்று குழந்தைகளை விட்டுவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

காஞ்சிபுரம் மாவட்டம் வரதராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செண்பகவள்ளி. இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இவருக்கு லாவண்யா என்ற தங்கையும் இருந்துள்ளார். 7 ஆண்டுகளுக்கு முன் பிரவசத்தின் போது அவர் இறந்து விட, தங்கையின் கணவனான ஜோசப்பை தனது வீட்டில் மாடியில் குடிவைத்துள்ளார் செண்பகவல்லி.

மாடியில் குடியேறிவர்… மெல்ல மெல்ல செண்பகவள்ளியின் மனதிலும் குடியேறியுள்ளார். கணவர் மாடாய் உழைத்து கொட்ட, செண்பகவள்ளி என்னும் செடி, மாடி வீட்டு மன்மதனுக்கு மலர்களை அள்ளி தரத் தொடங்கியது. ஆனால் ஜோசப்போ, வீட்டில் செண்பகவள்ளி, வெளியில் வேறோரு பெண் என, இரு குதிரைகள் பூட்டிய வண்டியில் சவாரி செய்துள்ளார்.

விஷயம் அறிந்து ஜோசப்பை கண்டித்துள்ளார் செண்பகவள்ளி. ஆனால் ”கட்டிய மனைவி போல கண்டிக்கும் வேலையெல்லாம் வைத்து கொள்ளாதே…!” என ஜோசப் அவரை எடுத்தெறிந்து பேச, திருடனுக்கு தேள் கொட்டியதை போல் கள்ளக் காதலன் தனக்கு இழைத்த அநீதியை வெளியில் சொல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல், மனதில் வைத்து புழுங்கி தவித்துள்ளார் செண்பகவள்ளி.

ஒரு கட்டத்தில், விரக்தியின் விளிம்புக்கு சென்ற அவர், தற்கொலை செய்யப் போவதாக கணவனுக்கு வீடியோ மெசேஜ் அனுப்பி உள்ளார். தனது மனைவியின் மறுபக்கம் அப்போதுதான் அவருக்கு தெரிய வந்தது. எனினும் ”வந்து பேசிக் கொள்கிறேன், தவறான முடிவேதும் எடுத்து விடாதே” என்று பதில் மெசேஜ் அனுப்பி வீட்டிற்கு விரைந்துள்ளார் அந்த அப்பாவி கணவர்.

ஆனால், அதற்குள் செண்பகவள்ளி முடிவை தேடிக் கொண்டார். துக்கம் தாள முடியாத அவர், துப்பட்டாவால் ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்து, தலைமறைவான தகாத உறவை வலை வீசி தேடி வருகின்றனர். 3 குழந்தைகளை அனாதையாக விட்டுவிட்டு, கள்ளக் காதலனுக்காக பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: Extramarital affairIllegal Affairjosephwoman
Previous Post

ஈரோடு புறநகர் இரண்டாக பிரிப்பு… அதிமுக தலைமைக் கழக அறிவிப்பு

Next Post

AR. ரகுமான்னா எவுரு? லூஸ் டாக் விட்ட பாலகிருஷ்ணா… வச்சு செய்யும் நெட்டிசன்கள்

Related Posts

எங்க ஏரியா உள்ள வராதே என கூச்சலிடும் திமுகவினர்! ஸ்டாலின் தொகுதியில் சமூகநலக்கூடங்களை ஆக்கிரமித்து அராஜகம்!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சொந்தக் கட்சிக்குள்ளேயே பெண்களை மோசமாக நடத்தும் திமுக..!

August 11, 2023
பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் தவறான சிகிச்சையால் பலி!
தமிழ்நாடு

பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் தவறான சிகிச்சையால் பலி!

February 9, 2023
பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறிக்க முயன்ற நபரை பிடித்து தர்மஅடி கொடுத்த பொதுமக்கள்!
தமிழ்நாடு

பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறிக்க முயன்ற நபரை பிடித்து தர்மஅடி கொடுத்த பொதுமக்கள்!

February 7, 2023
அரசு தொகுப்பு வீட்டின் மேல் கூரை இடிந்து விழுந்து பெண் காயம்!
தமிழ்நாடு

அரசு தொகுப்பு வீட்டின் மேல் கூரை இடிந்து விழுந்து பெண் காயம்!

February 7, 2023
காதல் திருமணம் செய்த பெண் கடத்தப்பட்ட சம்பவம்!
தமிழ்நாடு

காதல் திருமணம் செய்த பெண் கடத்தப்பட்ட சம்பவம்!

February 2, 2023
திருப்பத்தூர் அருகே நாட்டு துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் படுகாயமடைந்த பெண்!
தமிழ்நாடு

திருப்பத்தூர் அருகே நாட்டு துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் படுகாயமடைந்த பெண்!

January 25, 2023
Next Post
AR. ரகுமான்னா எவுரு? லூஸ் டாக் விட்ட பாலகிருஷ்ணா… வச்சு செய்யும் நெட்டிசன்கள்

AR. ரகுமான்னா எவுரு? லூஸ் டாக் விட்ட பாலகிருஷ்ணா... வச்சு செய்யும் நெட்டிசன்கள்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version