தெலுங்கானாவில் பெண் எரித்துக் கொலை: தனியொருவராய் பதாகைகளுடன் போராடிய சிறுமி

தெலுங்கானாவில் பெண் எரித்துக் கொள்ளப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை உடனடியாக தூக்கிலிட வலியுறுத்தி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் குற்றவாளிகள் சிறை வைக்கப்பட்டுள்ள சாத் நகர் காவல்நிலையம் முன்பு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு கூடுதல் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். குற்றவாளிகளை உடனடிகாவல்துறையினர் பலமுறை எச்சரித்தும் பொதுமக்கள் கலைய மறுத்ததால் தடியடி நடத்தி காவல்துறையினர் கலைத்தனர்.

தெலுங்கானாவில் பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து டெல்லியில் பள்ளிச் சிறுமி ஒருவர் தனியொருவராய் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கையில் பதாகைகளுடன் ஆர்ப்பாட்டம் செய்த அவரை காவல்துறையினர் சமாதானம் செய்து அழைத்துச் செல்ல முயன்றனர். சிறுமி சாமாதானமாகாததால் அவரை வலுக்காட்டயமாக வேனில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.

Exit mobile version