சிலை கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த பெண் கைது

சென்னை விமான நிலையத்திற்கு, மஸ்கட்டிலிருந்து வந்த ஓமன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது புதுச்சேரியை சேர்ந்த மரிய தெரசா என்ற பெண்ணிடம் அதிகாரிகள் அவரது குடியுரிமை மற்றும் ஆவணங்களை சோதனை செய்தனர்.

அப்போது சிலை கடத்தல் வழக்கில் தொடர்புடையவர் என்பது தெரியவந்தது. கடந்த 2011ம் ஆண்டில் அவரது வீட்டில் இருந்து 11 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. இந்தநிலையில் தலைமறைவான அப்பெண்ணை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் தேடிய வந்தனர். இந்தநிலையில், சென்னை வந்த அவரை சிலை கடத்தல் பிரிவு காவல் துறையினர் கைது செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Exit mobile version