பக்கத்து வீட்டு பெண்ணை கரண்டியால் தாக்கிய பெண் கைது

கன்னியாகுமரி அருகே, அண்டை வீட்டு பெண்ணுடன் மல்லுக்கட்டி, கரண்டியால் தாக்கிய பெண்ணை, காவல்துறையினர் கைது செய்தனர்.

குருந்தன்கோடு பகுதியைச் சேர்ந்த புஷ்பம் என்பவர், அண்டை வீட்டில் வசிக்கும் கவிதா என்பவருடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், கவிதாவை புஷ்பா கரண்டியால் சரமாரியாக தாக்கி கீழே தள்ளும் காட்சிகள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவியது.

இதையடுத்து, இரு தரப்பிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில் புஷ்பா அப்பகுதியில் உள்ள பல பெண்களிடம் இதே போல் தகராறில் ஈடுபட்டு தாக்கியுள்ளது தெரிய வந்தது.

இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர்

Exit mobile version