அரசு அனுமதியின்றி பாலாற்றில் மணல் திருடியவர்கள் கைது

வேலூர் மாவட்டம் வீராங்குப்பம் பகுதி பாலாற்றில் அனுமதியின்றி மணல் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீராங்குப்பம் பகுதியில் இரவு நேரங்களில் மணல் கொள்ளை நடப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வாணியம்பாடி சாலையில் சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர் மாட்டுவண்டியில் மணல் கடத்தி வந்த சேகர், கணபதி ஆகிய இருவரைக் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய நான்கு பேரைத் தேடி வருகின்றனர். அப்போது மணல் திருட்டுக்கு பயன்படுத்திய மாட்டுவண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Exit mobile version