மருத்துவ நிபுணர் குழுவுடன், முதலமைச்சர் இன்று முக்கிய ஆலோசனை…

கடந்த 11ம் தேதி, ஊரடங்கிற்கு பிறகு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். அதனை தொடர்ந்து, 5வது முறையாக நேற்று முன் தினம் இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடம் பிரதமர் உரையாற்றினார். அப்போது  நாட்டின் 4ம் கட்ட தேசிய ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுவது, முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கும் என கூறியிருந்தார். இதை அடுத்து, நேற்று, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், தமிழக அரசு அமைத்துள்ள சிறப்பு மருத்துவ நிபுணர் குழுவுடன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டத்தில் மருத்துவ நிபுணர்கள் வழங்கும் ஆலோசனையின் அடிப்படையில், ஊரடங்கை நீட்டிப்பது அல்லது தளர்வுகள் குறித்து முதலமைச்சர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Exit mobile version