ஊரடங்கை மீறி கூட்டம் நடத்திய காங்கிரஸ் மீது நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு?

நடந்த முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டதில் 18 உறுப்பினர்கள் வெற்றி பெற்றனர். அவர்களில் சட்டமன்றக் குழு தலைவர் யார் என்பதை தேர்ந்தெடுக்கும் கூட்டம், சென்னை சத்தியமூர்த்தி பவனில், காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர், கே.எஸ். அழகிரி தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து 4 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இக்கூட்டத்தில், சட்டமன்றக் குழு தலைவரை தேர்ந்தெடுப்பதில் இழுபறி நீடித்ததாக கூறப்படுகிறது. காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களான பிரின்ஸ், விஜயதாரணி, முனிரத்னம், செல்வப்பெருந்தகை ஆகியோரிடையே பலத்தப் போட்டி நிலவுவதால், காங்கிரஸ் கட்சியின் டெல்லி தலைமை இடத்தில் இருந்து, சட்டமன்றக் குழு தலைவர் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Exit mobile version