நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை – சரத் பவார்

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் அறிவித்துள்ளார்.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேசிய காங்கிரஸ் கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்பவார் போட்டியிட வேண்டும் என்று அக்கட்சியினர் விருப்பம் தெரிவித்து வந்தனர். மகாராஷ்டிராவில் உள்ள மதா தொகுதியில் போட்டியிட வேண்டும் என்றும் அவரது ஆதரவாளர்கள் கூறி வந்தனர். இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று அவர் அறிவித்துள்ளார். மகாராஷ்டிரம் மாநிலம், புனேவில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது அவர் இவ்வாறு கூறினார். தன்னுடைய மகள் சுப்ரியா சுலே, பேரன் பரத் பவார் ஆகியோர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதால், தான் போட்டியிட வேண்டாம் என்று தீர்மானித்துள்ளதாக சரத்பவார் தெரிவித்தார்.

Exit mobile version