வாரணாசி தொகுதியில் மோடி மீண்டும் போட்டி?

நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி மீண்டும் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு மும்முரமாக தயாராகி வருகின்றன. அந்த வகையில், பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் டெல்லியில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் இதில் கலந்து கொண்டனர். கூட்டத்தில், மக்களவை தேர்தல் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி மீண்டும் போட்டியிடுவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக, ஒடிசாவின் பூரி தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version