திமுக கட்சியிலுள்ள பிரமுகர்களின் மது ஆலைகளை மூட வலியுறுத்துவாரா ஸ்டாலின்? துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்

ஸ்டாலினுக்கு, உண்மையாக மக்கள் மீது அக்கறை இருந்தால், திமுக கட்சியில் உள்ள முக்கிய பிரமுகர்களின் மது ஆலைகளை மூட வலியுறுத்துவாரா, என சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கேள்வி எழுப்பியுள்ளார். கோவை மாவட்டம் மெட்டுப்பாவி மற்றும் காவிளிபாளையம் ஆகிய கிராமங்களிலுள்ள, 300க்கும் மேற்பட்ட ஏழை குடும்பங்களுக்கு, அரிசி மற்றும் மளிகை பொருட்களை, வீடு வீடாகச் சென்று, சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஊரடங்கு தளர்வு காரணமாக, மதுபான கடைகள் மீண்டும் திறக்கப்பட்டதை வைத்து, திமுக தலைவர் ஸ்டாலின் அரசியல் நாடகம் நடத்துவதாக, குற்றம்சாட்டினார். மேலும் ஸ்டாலினுக்கு, உண்மையாக மக்கள் மீது அக்கறை இருந்தால், திமுக கட்சியில் உள்ள முக்கிய பிரமுகர்களின் மது ஆலைகளை மூட வலியுறுத்துவாரா, என சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கேள்வி எழுப்பினார்.

Exit mobile version