அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு கல்வெட்டு கோரிக்கை பரிசீலக்கப்படும்: ஆர்.பி. உதயக்குமார்

ஜல்லிக்கட்டு உரிமையை மீட்டெடுக்க போராடியவர்களின் நினைவாக, அலங்காநல்லூரில் கல்வெட்டு அமைப்பது தொடர்பான கோரிக்கை பரிசீலக்கப்படும் என்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் உறுதியளித்துள்ளார்.

கடந்த ஆண்டு, அலாங்கநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் மற்றும் துணை முதல்வர் துவக்கி வைத்தனர். அதன் நினைவாக, இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டியின் போது, கல்வெட்டு ஒன்றை அமைச்சர் ஆர்.பி உதயக்குமார் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜல்லிக்கட்டு உரிமைக்காக போராடிய மக்களின் நினைவாக கல்வெட்டு அமைக்க வரும் கோரிக்கைகள் பரிசீலக்கப்படும் என்றார்.

Exit mobile version