திருப்பதி வனப்பகுதியில் காட்டுத் தீ விபத்து

திருப்பதியில் உள்ள வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பதி ஏழுமலையான் கோவில் பின்புறம் இருக்கும் வனப்பகுதியில் இருவேரு இடங்களில் திடீரென்று காட்டுத் தீ பற்றி எரிந்தது. தகவலறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர், காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 50 ஏக்கருக்கும் மேற்பட்ட வனப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில், அரிய வகை மூலிகை செடிகளும், உயிரினங்களும் தீயில் கருகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வனப்பகுதியில் பல்வேறு இடங்களில் புகை மூட்டம் காணப்படுவதாலும், மீண்டும் தீ விபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதால் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Exit mobile version