பந்திப்பூர் சரணாலயத்தில் பற்றி எரியும் காட்டுத் தீ

முதுமலை அருகே பந்திப்பூர் சரணாலயத்தில் பற்றி எரியும் காட்டுத் தீயால் 500 ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் எரிந்து நாசமாகியுள்ளன.

கர்நாடகாவில் உள்ள பந்திப்பூர் புலிகள் சரணாலயம் வனப்பகுதியில் நேற்று காட்டுத் தீ ஏற்பட்டது. மளமளவென பரவிய தீயால், கெம்பேபுரா, கவுரிகல்லு பெட்டா உள்ளிட்ட வனப்பகுதிகளில் உள்ள மரம், செடிகள் கருகின. தொடர்ந்து அடுத்தடுத்த பகுதிகளில் தீ பற்றி எரிந்து வருகிறது. வனத்துறை அதிகாரிகள், தீயணைப்பு ஊழியர்கள் தீயை கட்டுப்படுத்த கடுமையாக போராடி வருகின்றனர்.

பந்திப்பூர் – கூடலூர் நெடுஞ்சாலை பகுதிகளில் புகை சூழ்ந்துள்ளதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருக்கிறது. வனப்பகுதியில் மர்ம நபர்கள் தீ வைப்பதால் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாக கூறப்படுகிறது.

Exit mobile version