கொடைக்கானல் வனப்பகுதியில் காட்டுத் தீ

கொடைக்கானல் வனப்பகுதியில் 2வது நாளாக எரிந்து வரும் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் 50 பேர் அடங்கிய தீத்தடுப்பு காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த ஒரு மாதமாக நிலவிய கடுமையான உறை பனி காரணமாக புற்கள் கருகி உள்ளன. இந்நிலையில், வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே தேன் பண்ணை வனப்பகுதியில் திடீரென காட்டுத் தீ ஏற்பட்டது.

இதில் பல்வேறு அரிய வகை மரங்கள் மற்றும் மூலிகைச் செடிகளும் எரிந்து சாம்பலாகின. இரண்டாவது நாளாக சிட்டி வியூ மற்றும் டால்பின் நோஸ் ஆகிய பகுதிகளில் காட்டுத் தீ எரிந்து வருகிறது. தீயை அணைக்கும் பணியில் 50 பேர் கொண்ட தீத்தடுப்பு காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Exit mobile version