உத்தமபாளையம் அருகே உள்ள வனப்பகுதியில் காட்டுத் தீ விபத்து

உத்தமபாளையம் அருகே உள்ள மேற்குத்தொடர்ச்சி மலை அருவா தீட்டி பாறை பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால் அரியவகை மூலிகைகள், மரங்கள் எரிந்து சேதமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள வனப்பகுதியில் மரங்கள் காய்ந்து போயுள்ளன. இந்நிலையில் மேற்குத்தொடர்ச்சிமலை அருவா தீட்டி பாறை பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ மளமளவன பரவி வருகிறது. தொடர்ந்து காட்டுத் தீ கொளுந்து விட்டு எரிவதால் அரியவகை மூலிகை செடிகள் மற்றும் மரங்கள் தீயில் எரிந்து சேதம் அடைந்து வருகின்றன.

இந்தக் காட்டுத் தீயால் வன விலங்குகள் வெப்பம் தாங்காமல் விளை நிலங்களுக்குள் தஞ்சம் அடையும் நிலை உருவாகி உள்ளது.

Exit mobile version