ரஷ்யாவில் காட்டு தீயை அணைக்கும் பணி தீவிரம்

ரஷ்யாவில் ஏற்பட்டுள்ள காட்டு தீயை அணைக்கும் முயற்சியில், அந்நாட்டு ராணுவம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

ரஷ்யா நாட்டின் க்ராஸ் நோயர்ஸ்க் மற்றும் இர்குட்ஸ்க் மாகாணங்களில் உள்ள காடுகளில் திடீரென தீப்பற்றியது. சுமார் 10 லட்சம் ஹெக்டேருக்கு, அதிகமான நிலப்பரப்பில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயை, ஹெலிகாப்டர் மூலம் அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தீ பரவாமல் தடுக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். கடந்த வாரம், இதே பகுதியில் 20 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் காட்டுத் தீ பிடித்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version