நவமலை மலை கிராம பகுதியில் புகுந்த காட்டு யானைகளால் மக்கள் பீதி

கோவை மாவட்டம் நவமலை மலை கிராம பகுதியில் புகுந்த காட்டு யானைகளை விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். பொள்ளாச்சியை அடுத்த நவமலை மலை கிராமத்தில் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. காட்டு யானைகளின் நடமாட்டத்தால் மக்கள் பீதியில் உள்ளனர். கிராம மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், சுற்றித்திரியும் யானைகளை விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

20 பேர் கொண்ட இரண்டு குழுக்கள், 24 மணி நேரமும் யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். ஊருக்குள் புகுந்த யானைகளை பட்டாசுகளை வெடித்து காட்டிற்குள் விரட்டும் பணியில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Exit mobile version