வாழை மரங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்

சத்தியமங்கலம் அருகே விவசாய தோட்டங்களில் புகுந்த யானைகள் 100-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதப்படுத்தின.

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் வனச்சரகத்திற்குட்பட்ட விளாமுண்டி வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இரவு நேரங்களில் வன விலங்குகள் அருகில் உள்ள குடியிருப்பு பகுதி மற்றும் விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. கரிதொட்டாம்பாளையம் கிராமத்தில் நுழைந்த 3 காட்டு யானைகள், ராமசாமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் புகுந்து வாழை மரங்களை சேதப்படுத்தியது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர், யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

Exit mobile version