சுற்றுச்சுவரை உடைத்து பள்ளிக்குள் புகுந்த காட்டு யானை

கோவையில், பள்ளியின் சுற்றுச்சுவரை உடைத்துக் கொண்டு, யானை நுழைந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது

கோவை கணுவாய் பகுதியில் உள்ள சஞ்சீவி நகர் குடியிருப்பு பகுதிக்குள் வந்த யானை ஒன்று திடீரென அங்குள்ள அரசு பள்ளியின் சுற்றுச்சுவரை உடைத்தது. ஆக்ரோசம் குறையாத நிலையில் அந்த யானை திடீரென பள்ளிக்குள்ளும் புகுந்து விட்டது.இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர், பொதுமக்கள் உதவியுடன் பட்டாசுகளை வெடித்து, யானையை காட்டுக்குள் விரட்டினர். அரசு பள்ளிக்குள் யானை நுழைந்ததால் பள்ளி மாணவ-மாணவிகள் பெரும் பதற்றத்துக்கு ஆளாகினர்.கோவையில் யானைகள் உணவை தேடி ஊருக்குள் புகுந்து விளைநிலங்களைச் சேதப்படுத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Exit mobile version