கணவனின் உடலை 10 ஆண்டுகளாக பிரீசரில் வைத்து பாதுகாத்த மனைவி

அமெரிக்காவில்  இறந்து போன  கணவனின் உடலை  10 ஆண்டுகளாக பிரீசரில் வைத்து பாதுகாத்த மனைவி செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் உடா மாகாணத்தை சேர்ந்தவர் ஜீன் சவுரோன்-மாதர்ஸ். இவரது கணவர் ஓய்வு பெற்ற  முன்னாள் ராணுவர். 10 ஆண்டுகளுக்கு முன் மரணமடைந்தார். இதனால் தனிமையில் வாழ்ந்து வந்தார் மாதர்ஸ்.

இந்நிலையில் கடந்த மாதம் மாதர்ஸ் வீட்டில் வழக்கமாக சோதனைக்கு முன்னாள் ராணுவ அதிகாரிகள் வந்தனர்.  அப்போது வீட்டினுள் ஜீன் மாதர்ஸ்  இறந்து கிடந்தார். அவரது உடலை பரிசோதித்த காவல்துறையினர் அவரது மரணம் இயற்கையானது தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து வீட்டினுள் சோதனை செய்ததில் காவல்துறையினருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. வீட்டின் பிரீசரில் இறந்த நிலையில் கணவரின் உடல்  உள்ளே வைக்கப்பட்டிருந்தது,தெரிய வந்தது. இதனை பரிசோதித்த மருத்துவர்கள், 10 ஆண்டுகளுக்கு முன் இறந்த உடல் என்று உறுதிசெய்த நிலையில் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்

Exit mobile version