திமுக நகர தலைவர் மீது மனைவி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

வாணியம்பாடி திமுக நகர தலைவர் சாரதிகுமார் கள்ளக்காதலியுடன் சேர்ந்து தன்னையும், தனது குழந்தையையும் கொலை செய்து விடுவதாக மிரட்டி வருவதாக அவரது மனைவி ரம்யா காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி திமுக நகர தலைவரும், பொறுப்பாளருமான சாரதிகுமார் மீது, அவரது மனைவி ரம்யா, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில், தனது கணவர் சாரதிகுமார் கள்ளக்காதலியுடன் சேர்ந்து தன்னையும் தனது குழந்தையையும் கொலை செய்து விடுவதாக மிரட்டி வருவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், தனது நகைகளையும், சொத்துக்களையும் பறித்துக் கொண்டதாக அதில் குறிப்பிட்டுள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தனது திருமணத்தை திமுக தலைவர் ஸ்டாலினும் அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் நடத்தி வைத்தார்கள் என்பதை ஆதாரத்தோடு தெரிவித்தார்.

Exit mobile version