மனைவியை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொன்ற கணவன்

சிவகங்கை மாவட்டத்தில் மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த கணவன், அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம், சாலைக்கிராமத்தில் வசித்து வந்த வாணிமுத்து-வான்மதி தம்பதியினர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்துள்ளனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு, வெளிநாட்டில் தான் சம்பாதித்த பணம் மற்றும் நகைகளுக்கு வாணிமுத்து, வான்மதியிடம் கணக்கு கேட்டுள்ளார். இதற்கு வான்மதி சரியாக பதிலளிக்காததால், மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த வாணிமுத்து பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்த நிலையில், வான்மதி வீட்டிற்கு சென்ற வாணிமுத்து, ஒன்று சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்தாக தெரிகிறது. இதற்கு வான்மதி மறுப்பு தெரிவித்ததால், ஆத்திரமடைந்த வாணிமுத்து அருகில் இருந்த அரிவாளால் வான்மதியை சரமாரியாக வெட்டினார். பின்னர் அவர் காவல்நிலையத்தில் சரண் அடைந்தார். வாணிமுத்து தனது மகன் கண் முன்னே, மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version