இன்றும் பரவலாக மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இன்றும் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் பருவமழை தீவிரமடைந்து வருவதால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை தொடரும் என்று தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. நீலகிரி, கோவை உள்ளிட்ட மலை மாவட்டங்களில் இன்று மிக அதிகக் கனமழை பெய்யும் என்றும், சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Exit mobile version