வந்தவாசி சுற்றுவட்டார கிராமங்களில் பரவலாக மழை-விவசாயிகள் மகிழ்ச்சி

வந்தவாசி சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் அதிகாலை முதல் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மற்றும் சுற்றுப் பகுதிகளான சாலவேடு, மருதாடு, மாம்பட்டு, தென்னாங்கூர் சலுகை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்தது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்நிலைகள், அணைகள், ஏரி, குளம், கிணறு உள்ளிட்ட பகுதிகளில் நீர் நிரம்பி வருகிறது. இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Exit mobile version