தேர்தல் பிரசாரத்தை ஏன் தொடங்கினேன்? முதலமைச்சர் விளக்கம்

அதிமுக நிர்வாகிகளின் கோரிக்கையை ஏற்று, தேர்தல் பிரசாரத்தை முன்னதாகவே தொடங்கியதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சேலம் மாவட்டம் சிங்கனூரில் கட்டப்பட்டுள்ள அம்மா மினி கிளினிக்கை திறக்கச் சென்ற முதலமைச்சர், வனவாசியில் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், கடந்த 15 நாட்களுக்கு முன்பாக திமுகவினர் பிரசாரத்தை துவங்கி, ஆதாரமற்ற கருத்துகளை கூறி வருவதாக தெரிவித்தார். எனவே, அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று தேர்தல் பிரசாரத்தை முன்னதாகவே துவங்கியதாக விளக்கமளித்தார்.

Exit mobile version