ரோம் மாஸ்டர்ஸ் டென்னிஸ் இறுதிப்போட்டியில் வெல்லப்போவது யார்?

இத்தாலி ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில், உலகின் நம்பர் ஒன் வீரரான நோவாக் ஜோக்விச்சுடன், ஸ்பெயின் ஜாம்பவான் ரஃபேல் நடால் பலப்பரீட்சை நடத்துகிறார்.

இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெற்று வந்த மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர், இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இத்தாலி ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில், 9 முறை சாம்பியனும், உலகின் நம்பர் ஒன் வீரருமான செர்பியாவின் நோவாக் ஜோக்விச்சுக்கும், ஆறு முறை சாம்பியனும், ஸ்பெயின் ஜாம்பவானுமான ரஃபேல் நடால் இடையே பலப்பரீட்சை நடைபெறுகிறது. இன்றிரவு 8.30 மணிக்கு இறுதிப் போட்டி தொடங்குகிறது. ஜோக்விச்சும், ரஃபேல் நடாலும் இதுவரை 57 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். கடைசியாக கடந்தாண்டு நடந்த பிரான்ஸ் ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டனர். அந்த போட்டியில், ரஃபேல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார்.

Exit mobile version