ஜாண்டி சொன்ன உலகின் தலைசிறந்த பீல்டர் யார் தெரியுமா?

உலக கிரிக்கெட்டில் தலை சிறந்த பீல்டர் என்றால் அது ‘ஜாண்டி ரோட்ஸ்’ தான். தென்னாப்ரிக்காவை சேர்ந்த அவரது பீல்டிங்-கிற்கு உலகம் முழுவதும் தனி ரசிகர்கள் உண்டு. தற்போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அவர், கவுண்டி மற்றும் சர்வதேச அணிகளுக்கு பீல்டிங் ஆலோசகராக இருக்கிறார். உலக கோப்பை கிரிக்கெட் நெருங்கி வரும் நிலையில், “Ask Legends” என்று தலைப்பில் முன்னாள் வீரர்களிடம் கேள்வி கேட்டு வருகிறது.

அதன்படி உங்களுக்கு பிடித்த cricket fielder யார் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் 5 வீரர்களை வரிசை படுத்தினார். அதன் படி,

5வது இடத்தில் – ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்
4வது இடத்தில் – ஹெர்ஷேல் கிப்ஸ்
3வது இடத்தில் – பவுல் காலிங்வுட்
2வது இடத்தில் – ஏபி டீவில்லியர்ஸ்

 

அவரது பட்டியலில், முதல் இடத்தில் இந்தியாவின் சுரேஷ் ரெய்னா இடம் பிடித்துள்ளார்.

 

 

“எனக்கு சுரேஷ் ரெய்னாவின் பீல்டிங் ரொம்ப பிடிக்கும், அவர் பீல்டிங்கில் ஆல் ரவுண்டர், வீழ்ந்து பந்தை தடுப்பதற்கு கொஞ்சம் கூட யோசிக்க மாட்டார் அவரது பீல்டிங் பார்ப்பதற்கு மிக அற்புதமாக இருக்கும், அதனால் தான் அவரை நம்பர் 1 இடத்தில் வைத்திருக்கிறேன்.” என்று ஜாண்டி கூறினார்.

Exit mobile version