சிறந்த ஆட்சியை தருவது யார்?- கருத்துக்கணிப்பு

நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக 83 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது

பிரபல ஆங்கில நாளிதழான டைம்ஸ் ஆப் இந்தியா 2 லட்சம் பேரிடம் நடத்திய மெகா கருத்து கணிப்பில் பிரதமர் மோடிக்கு ஆதரவு பெருகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 9 மொழிகளில் ஆன்லைனில் நடத்தப்பட்ட இந்த கருத்து கணிப்பில் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.

இந்த கருத்து கணிப்பில் சிறந்த ஆட்சியை தருவது யார் என்ற கேள்விக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு 83 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு அடுத்த இடத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளார். அவருக்கு 8 புள்ளி 33 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜிக்கு 1 புள்ளி 44 சதவீதம் பேரும், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதிக்கு புள்ளி 43 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

2014-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது ராகுல் காந்தியின் செல்வாக்கு அதிகரித்துள்ளதா என்ற கேள்விக்கு 31 சதவீதம் பேர் அதிகரித்துள்ளதாக கூறியுள்ளனர்

மோடி ஆட்சி மிகவும் நன்று என 59 புள்ளி 51 சதவீதம் பேரும், நன்று என 22 புள்ளி 29 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.வரும் மக்களவைத் தேர்தலில் வேலைவாய்ப்புகள் பிரச்சினைதான் முக்கிய பிரச்சினையாக இருக்கும் என்றும் வாக்காளர்கள் கூறியுள்ளனர்.

Exit mobile version