கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷ வாயு தாக்கி 6 பேர் பலி

ஸ்ரீபெரும்புதூர் அருகே கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷ வாயு தாக்கி 6 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் செல்வப்பெருமாள் நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் தனது வீட்டின் அருகே உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய நினைத்து இறங்கியபோது அவரை விஷ வாயு தாக்கியது. அவர் தத்தளிப்பதை பார்த்து அவரது மகன்கள் கண்ணன் மற்றும் கார்த்திக் ஆகிய இருவர் உள்ளே இறங்கியதில், இருவரையும் விஷவாயு தாக்கியது. கார்த்திக் கூக்குரலிட்டு உதவி கேட்டதால் வாடகைக்கு குடியிருந்த வடமாநிலத்தை சேர்ந்த என்ற லட்சுமிபதி என்ற இளைஞரும் உள்ளே இறங்கினார். அவரையும் விஷ வாயு தாக்கியது. அப்போது அங்கு வந்த ரமேஷ், சுரபாய் ஆகியோர் என்ன நடக்கிறது என்பதை அறியாமல் உள்ளே இறங்கிய போது அவர்களையும் விஷ வாயு தாக்கியது. இதில் 6 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து சார் ஆட்சியர் சரவணன் நேரில் வந்து விசாரணை நடத்தினார். எவ்வித பாதுகாப்பு உபகரணமும் பயன்படுத்தாமல் உள்ளே இறங்கியதால் 6 பேரும் உயிரழந்ததாக அவர் தெரிவித்தார்

Exit mobile version