சவால்களை எதிர்கொண்டால் உயர்ந்த நிலையை அடையலாம்: தமிழிசை

விமர்சனங்களை கண்டு கொள்ளாமல், கடினமாக உழைத்தால் சமுதாயத்தில் உயர்ந்த நிலையை அடையலாம் என தெலங்கானா ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

சென்னை மயிலாப்பூரில், பத்மஸ்ரீ டாக்டர் ஜெய அருணாச்சலத்தின் 88-வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதனையொட்டி, உழைக்கும் மகளிர் சங்கத்தின் சார்பில் சிறந்த மகளிர் கூட்டுறவு அமைப்புகளுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. இதில், சிறப்பு விருந்தினராக தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு விருது வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், ஆளுநராக ஒரு மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது என்பது சாதாரண விஷயமல்ல என்றும் அதனை தான் சிறப்பாக செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

இந்தியாவிலேயே தாம்தான் இளம் வயது ஆளுநர் என்று கூறிய தமிழிசை, எந்தவித விமர்சனங்களையும் கண்டு கொள்ளாமல், கடுமையாக உழைத்தால் சமுதாயத்தில் உயர்ந்த நிலையை அடையலாம் என்றார். அதற்கு தாமே ஒரு உதாரணம் என்றும் அவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.

Exit mobile version