தெலங்கானா மாநில ஆளுநராக தமிழிசை நியமனம்: முதல்வர், துணை முதல்வர் வாழ்த்து

தெலங்கானா மாநில அளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை சவுந்தரராஜனுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவராக செயல்பட்டு வந்த தமிழிசை சவுந்தரராஜனை, தெலங்கானா மாநில ஆளுநராக நியமித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இதையடுத்து தெலங்கானா ஆளுநராக பதவியேற்க உள்ள தமிழிசை சவுந்தரராஜனுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். லண்டனில் உள்ள முதலமைச்சர், தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்தார். வாழ்த்து தெரிவித்த முதலமைச்சருக்கு தமிழிசை நன்றி தெரிவித்தார்.

இதேபோல், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், தெலங்கானா ஆளுநராக பதவியேற்க உள்ள தமிழிசைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்த துணை முதமைச்சருக்கு, தமிழிசை சவுந்தரராஜன் நன்றி தெரிவித்துள்ளார்.

Exit mobile version