தமிழகத்திற்கு என்றும் நன்றியுடன் இருப்பேன்: தமிழிசை

தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழகத்திற்கு என்றும் நன்றியுடன் இருப்பேன் என்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது தெரிவித்தார்.

கோவையை அடுத்த சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியின் நிறுவனர் தின விழாவில், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார். அப்போது, நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழகத்திற்கு என்றும் நன்றியுடன் இருப்பேன் என்று கூறினார். தன்னை மேதகு ஆளுநர் என்று அழைப்பதை விட பாசமிகு சசோதரி என்று அழைப்பதை தான் நான் அதிகம் விரும்புகிறேன் என்றும் கூறினார்.

Exit mobile version