பாகிஸ்தானின் பொருளாதர மந்தத்திற்கு காரணம் என்ன? சிறப்பு தொகுப்பு

பாகிஸ்தான் நாட்டில் பொருளாதாரம் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. இந்த நிலையில் அங்குள்ள காய்கறி சந்தையில், தக்காளி 300 ரூபாய்க்கு விற்கபடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தான் பொருளாதர மந்தத்

காஷ்மீர் விவகாரத்தில் ஐக்கிய நாடுகளின் ஆதரவு கிடைக்காதது பாகிஸ்தான் அரசுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது. இந்தியாவுடனான ராஜாங்க மற்றும் வணிக ரீதியிலான அனைத்து உறவுகளையும் துண்டித்தது பாகிஸ்தான். பாகிஸ்தானின் இந்த முடிவு அவர்களின் நாட்டிற்கே பெரும் சரிவை உருவாகியுள்ளது.

இந்திய விவசாயிகளும், வர்த்தகர்களும், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட விளைபொருட்களை பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்தது நிறுத்தபட்டு விட்டது. மேலும், பருவம் தவறி பெய்த மழை போன்ற காரணங்களாலும் உள்நாட்டில் தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய காரணங்களால் பாகிஸ்தானில் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பாகிஸ்தானில் ஒரு கிலோ தக்காளியின் விலை 180 முதல் 300 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விலை உயர்வால் மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். விலை உயர்வை கட்டுப்படுத்த ஈரான் நாட்டில் இருந்து தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளை இறக்குமதி செய்ய உள்ளதாக பாகிஸ்தான் நாட்டின் தேசிய உணவு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானின் நிதி ஆலோசகர் அப்துல் ஹபீஸ் ஷேக் இது பற்றி கூறுகையில், ‘ கராச்சியில் காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளி 17 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது’ என கூறியதையடுத்து பாகிஸ்தான் சமூக வலைதளவாசிகள் அவரை டுவிட்டரில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்தநிலையில் பாகிஸ்தானில் அதிபர் இம்ரான்கான் பதவி விலகவேண்டும்என தொடர் போராட்டம் பாகிஸ்தானில் நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version