ஆட்சியில் இருந்தபோது இயற்கை சீற்றத்திற்கு தி.மு.க என்ன செய்தது ? -பாஜக முன்னாள் எம்.பி

ஆட்சியில் இருந்தபோது இயற்கை சீற்றத்திற்கு திமுக என்ன செய்தது என பாஜக முன்னாள் எம்.பி ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த அண்ணாமடுவில், பாஜக சார்பில் மக்கள் சேவை மையம் துவக்க விழா நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், புயல் சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில், சிறப்பாக செய்து வருவதாகவும், எதிர்க்கட்சிகள் இதை அரசியலாக்க முயற்சித்து வருவதாகவும் கூறினார்.

Exit mobile version