3-வது டி20 போட்டி: இந்திய அணி பேட்டிங்

மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3-வது டி20 போட்டியில், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணி மோதும் 3-வது இருபது ஓவர் தொடர் மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது. இதில், டாஸ் வென்ற மேற்கிந்திய அணி கேப்டன் பொல்லார்ட் பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் இரண்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த போட்டியில் விளையாடிய ஜடேஜா, சஹால் அணியில் விளையாடவில்லை. இந்த 2 பேருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மற்றும் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மேற்கு இந்திய தீவுகள் அணிகளில் கடந்த போட்டிகளில் விளையாடிய வீரர்களே தற்போது விளையாடுகின்றனர்.

Exit mobile version