சூழ்நிலைக்கேற்ப விளையாட வேண்டும் என்பதை புரிந்துக் கொண்டேன்: ரிஷப் பந்த்

சூழ்நிலைக்கேற்ப விளையாட வேண்டும் என்பதை இப்போது புரிந்துக் கொண்டேன் என்று ரிஷப் பந்த் கூறியுள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக முதல் ஒருநாள் போட்டியில் விளையாடிய ரிஷப் பந்த், எப்போதும் போல துவக்கத்திலேயே தனது விக்கெட்டை பறிக்கொடுக்காமல், நிதானமாக விளையாடி அரைசதம் அடித்தார். இந்த போட்டியில் அவர் எடுத்த 71 ரன்கள் இந்திய அணி சரிவில் இருந்து மீள காரணமாக இருந்தது. இறுதியில், 50 ஓவர் முடிவில் இந்திய அணி 287 ரன்கள் எடுத்தது. இருப்பினும், பின்னர் சிறப்பாக ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இயற்கை விளையாட்டு என்ற கருத்து இல்லை என குறிப்பிட்ட ரிஷப் பந்த், நாம் தான் சூழ்நிலைக்கு ஏற்ப விளையாட வேண்டும் என்பதை இப்போது புரிந்துக் கொண்டேன் என்று தெரிவித்தார். மேலும் எனது ஆட்டத்தை மேம்படுத்த தொடர்ந்து முயற்சித்து வருவதாக தெரிவித்தார்.

Exit mobile version