பணிக்கு சென்ற பெண் கழுத்தறுத்து கொலை

விருதுநகரில், விவசாய வேலைக்கு சென்ற பெண்ணை, கழுத்தறுத்து கொலை செய்த குற்றவாளிகளை காவல்துறையினர் 24 மணி நேரத்தில் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் ராணி சேதுபுரம் கிராமத்தை சேர்ந்த சத்தியபாமா, சில தினங்களுக்கு முன்பு தோட்ட வேலைக்கு சென்று வீடு திரும்பாததால், அவரது உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகார் அளித்த மறுநாள், சத்தியபாமா, புல் மற்றும் செடிகள் மூடிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதனையடுத்து கொலை குற்றாவளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து, காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சந்தேகத்தின் பேரில், கோவையில் பதுங்கியிருந்த அழகர்சாமி என்ற குற்றவாளியின் கைபேசி எண்ணின் சிக்னல் மூலம், அவரையும், அவரது கூட்டாளிகள் 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சத்தியபாமாவை அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதும், அவர் கதறி சத்தம் போட்டதால் கழுத்தை அறுத்து கொலை செய்ததும் தெரியவந்தது.

Exit mobile version