தருமபுரியில் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு

திருப்பதியில் இருந்து தருமபுரி வழியாக சேலம் சென்ற தமிழக முதல்வருக்கு மாவட்ட எல்லையில் ஆட்சியர் மற்றும் கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

திருப்பதியில் இருந்து தருமபுரி வழியாக சேலம் செல்லும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தருமபுரி மாவட்ட எல்லையான காரிமங்கலத்தில் மாவட்ட ஆட்சியர் மலர்விழி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், கோவிந்தசாமி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி எஸ்.ஆர்.வெற்றிவேல் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் முதல்வருக்கு சால்வை அணிவித்தனர்.

அவற்றை பொறுமையுடன் பெற்றுக்கொண்ட முதல்வர் அனைவருக்கும் நன்றி தெரிவித்துவிட்டு சேலம் புறப்பட்டு சென்றார்.  

Exit mobile version