டெல்லி சென்ற முதலமைச்சர் பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு

டெல்லி சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் காந்தியடிகளின் 150ஆவது ஆண்டு பிறந்தநாள் நிறைவு நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்க உள்ளார்.

இதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றார். டெல்லி சென்ற முதலமைச்சருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

டெல்லி பயணத்தின் போது, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்திக்கிறார். அப்போது, தமிழகத்தின் முக்கியக் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அவர்களிடம் முதலமைச்சர் வழங்குகிறார். மத்திய அமைச்சர்களைச் சந்தித்து, தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மத்திய அரசின் திட்டங்களுக்கு, உடனடியாக நிதி ஒதுக்கவும் முதலமைச்சர் கோரிக்கை விடுக்க உள்ளார்.

Exit mobile version