தாயகம் திரும்பிய உலக சாம்பியன் பி.வி.சிந்துவுக்கு உற்சாக வரவேற்பு

உலக சாம்ம்பியன் பட்டத்தை வென்றுள்ள முதல் இந்தியரான இறகுப்பந்தாட்ட வீராங்கனை பி.வி. சிந்துவுக்கு தலைநகர் டெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் , ஜப்பான் வீராங்கனை நசோமியுடன் மோதி இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தங்கம் வென்றார். இதன்மூலம் உலக சாம்பியன்ஷிப் வரலாற்றில் , முதல்முறையாக தங்கப்பதக்கம் வென்ற இந்தியர் என்ற பெருமையையும் பி.வி.சிந்து அடைந்தார். இவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வந்தனர். இந்நிலையில், தாயகம் திரும்பிய வெற்றி வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, தனக்கு கிடைத்திருக்கும் வெற்றிக்கு ரசிகர்களின் ஆசிகளும், அன்பும் தான் காரணம் என்று தெரிவித்த அவர், தொடர்ந்து நிறைய பதக்கங்களை நாட்டுக்காக பெற்றுத்தருவேன் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

Exit mobile version