முதுமலை யானைகள் முகாமில் வளர்ப்பு யானைகளுக்கு எடை பரிசோதனை

நீலகிரி மாவட்டம் முதுமலையில் உள்ள யானைகள் முகாமில், வளர்ப்பு யானைகளுக்கு எடை பரிசோதனை நடத்தப்பட்டது.

கூடலூரை அடுத்த முதுமலையில் உள்ள யானைகள் முகாமில் 25 வளர்ப்பு யானைகள் உள்ளன. இவற்றில் 19 யானைகளுக்கு உடல் எடை பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் ஈடுபட்ட கால்நடை மருத்துவர்கள் தற்சமயம் காட்டில் நன்றாக மழை பெய்து புற்கள் வளர்ந்து யானைகளுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதில் திருச்சி சமயபுரத்திலிருந்து ஆயிரத்து 900 கிலோ எடையுடன் கொண்டு வரப்பட்ட மசினி யானை தற்போது உடல் எடை அதிகரித்து இரண்டாயிரத்து 580 கிலோவாக இருப்பதாக கால்நடை மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Exit mobile version